“பார்வை என்ற இம் மின்னூல் பற்றி…
“பார்வை” என்ற தலைப்பில் வெளியாகும் 21 சிறுகதைகளை மின்னூலாக உங்கள் பார்வைக்குச் சமர்ப்பிக்கிறேன். முதலாம் கதையான பார்வை ஒரு புகைப்படயாளரின் பல கோணப் பார்வைகள் பற்றியது. இத்தொகுப்பில் கதைகள் பெரும்பாலும் உண்மைச் சம்பவங்களைக் கருவாக வைத்து கற்பனையும் கலந்து பின்னப்பட்டவை. ஒரே விடயத்தைத் திருப்பித் திருப்பி வாசிக்கும் போது வாசகர்களுக்கு அலுப்புத் தட்டிவிடும் என்பது என் கருத்து. அதனால் கதைகளில் சகுனம், சீட்டு. விதவைத் திருமணம், செய்யும் தொழிலே தெய்வம், செவ்வாய் தோஷம், ஆண் ஆதிக்கம், சின்வீடு, அதிகாரம், தலைமுறை இடைவெளி, வாரிசு போன்ற பல வித்தியாசமான கருத்துக்களைக் கொண்ட கதைகளை நகைச்சுவை கலந்து உருவாக்கியுள்ளேன். கனடா. இலங்கை சூழல்களில் எழுதப்பட்ட கதைகள் இவை. எதிர்பாராத முடிவுகளைக் கொண்டவை. வாசியுங்கள், இரசியுங்கள், உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்.
பொன் குலேந்திரன்
மிசிசாகா
ஒன்றாரியோ- கனடா.
Kulendiren2509@gmail.com